சிம்ப்ளிசிட்டியின் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றார் சத்யமூர்த்தி கோவிந்தராஜன்

கோவையை மையமாகக் கொண்டு செயல்படும் சிம்ப்ளிசிட்டி செய்தி நிறுவனம், கோவை மாவட்டத்தில் நிகழும் அனைத்து செய்திகளையும், உண்மையாகவும், உடனுக்குடனும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் செயல்பட்டு வருகிறது. கடந்த 2016 ஆண்டு சிறிய குழுவின் மூலமாகத் தொடங்கப்பட்ட தங்களது செய்தி நிறுவனத்தில், கோவையில் உள்ள நிகழ்ச்சிகள் சாதனை நபர்கள் மற்றும் திறமையானவர்கள் குறித்த செய்திகளை வழங்கி வருகிறது.

ஒன்றரை ஆண்டுகளை கடந்து வெற்றிகரமாக செயல்பட்டு வரும் சிம்ப்ளிசிட்டிக்கு, இதுவரை லட்சத்திற்கும் மேற்பட்ட பயன்பாட்டாளர்கள் உள்ளனர்.  வாரத்திற்கு எங்களுடைய  வெப் சைட்  ஆறு  லட்சம்  பேரால் பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், சிம்ப்ளிசிட்டியின் தலைமை ஆசியராக சத்யமூர்த்தி கோவிந்தராஜன் பொறுப்பேற்றுள்ளார். செய்தித்துறையில் 36 ஆண்டுகள் அனுபவம் பெற்ற இவர், பிரபல இந்து நாளிதழின் மேற்கு   மண்டலமுன்னாள் தலைமை  ஆசிரியராக, பத்திரிக்கைத்துறையில் பல்வேறு பதவிகளையும் வகித்துள்ளார். 

இனி வரும் நாட்களில் ஆசிரியர் சத்யமூர்த்தி தலைமையில், பல்வேறு மாற்றங்களுடன், முக்கிய செய்திகளை தொகுத்து வழங்க காத்திருக்கிறோம். தங்களுக்கு ஆதரவு அளித்து வரும் பயனீட்டாளர்களுக்கு  நன்றி தெரிவித்துக் கொள்வதுடன், தங்களது கருத்துக்களை நேரிடையாக தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...