பணி இடமாற்றத்தால் காவல்துறை உதவி ஆய்வாளர் தற்கொலை முயற்சி..? போலீஸார் விசாரணை

வேலூருக்கு பணியிட மாற்றம் செய்யப்படுவதை விரும்பாத காவல்துறை உதவி ஆய்வாளர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை குனியமுத்தூரை அடுத்த கோவைப்புதூர் பகுதியில் தமிழ்நாடு சிறப்பு காவல்படையின் 4-வது பட்டாலியன் செயல்பட்டு வருகிறது. இதில் உதவி ஆய்வாளராக பணிபுரிபவர் ஸ்ரீகாந்த் (47). இவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர்.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு பணி நிமித்தம் காரணமாக வேலூர் சிறப்பு காவல்படைக்கு பணிக்கு சென்றார். அங்கு, கோவையில் இருந்து வேலூருக்கு ஸ்ரீகாந்தை இடமாற்றம் செய்யவதாக அதிகாரிகள் கூறியதாக தெரிகிறது. தொடர்ந்து, தீபாவளி பண்டிகையையொட்டி, விடுமுறையில் வீட்டுக்கு வந்த அவர், பணியிடமாற்றம் குறித்து மனைவியிடம் அலோசித்துள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

இதனால், விரக்தியடைந்த ஸ்ரீகாந்த் இன்று (அக்.,19) வீட்டில் இருந்த சாணிப்பவுடரை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கோவை ரயில்நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த குனியமுத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...