கொஞ்சம் இனிப்பு.. கொஞ்சம் பசுமை.. நெஞ்சம் நிறைய அன்பு..!


தீபாவளி என்றால் காலையில் எழுந்து குளித்து, புத்தாடை அணிந்து பட்டாசுகளை வெடித்து முடித்துவிட்டு, பலகாரங்களை சாப்பிட்டுக் கொண்டே டி.வி.யில் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி பார்ப்பது  ப அனைவரின் வழக்கம்.

ஆனால், காந்திபுரம் பேருந்து நிலையத்தில் வெளியூர் மற்றும் உள்ளுர் பேருந்து நிலையத்தில் பணியாற்றி கொண்டிருந்த சுமார் 100 பேருந்துகளின் ஓட்டுனர் மற்றும் நடத்துனருக்கு பசுமை தேசம் சார்பில் தீபாவளி வாழ்த்து கூறி, அவர்களுக்கு இனிப்பு, காரங்களுடன் துளசி நாற்று வழங்கப்பட்டது. இந்த எதிர்பாராத அன்பையும், வாழ்த்தையும் பெற்ற சில ஓட்டுனர்கள், எங்களையும் நேசிக்கிற மனுசங்க இருக்கிறார்கள் என்ற உற்சாகத்தை கொடுத்ததாகவும், இது எங்களுக்கு பெரிய அங்கீகாரம் என்றதுடன், நாங்களும் உங்களுடன் இணைந்து மரம் வைக்க தயார் என நெகிழ்ச்சியுடன் கூறினர்.

இவர்களுடன் காவல்துறையினர், தீயணைப்புத்துறையினர், 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. முகம் தெரியாத. மனிதர்களுக்கு இனிப்பு வழங்கி பிறரை மகிழ்வித்து தாங்களும் மகிழ்ந்த, இந்த தீபாவளி மறக்க முடியாததாய் அமைந்ததாகவும், இதேபோல, கடந்த நான்கு வருடங்களாக இந்தப் பணியை செய்து வருவதாக பசுமை தேசத்தினர் தெரிவித்தனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...