வால்பாறை பகுதியில் காட்டு யானைகள் தொடர்ந்து அட்டகாசம் - நான்கு வீடுகள் சேதம்

வால்பாறை அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டு யானைகள், நான்கு வீடுகளை சூறையாடின.



வால்பாறை அருகே பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் யானைகள் தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகிறது. பன்னிமேடு, சங்கிலிரோடு எஸ்டேட் பகுதியில் தொடர்ந்து கடந்த ஒரு வாரகாலமாக 6 யானைகள் கொண்ட கூட்டம் அப்பகுதியிலேயே முகாமிட்டுள்ளன. இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து, ரேஷன் கடை, சத்துணவுக்கூடம், தொழிலாளர்கள் குடியிருப்பு போன்றவற்றை இடித்து சேதப்படுத்தி வருகிறது.



இந்த நிலையில், நேற்று (அக்.,18) நள்ளிரவு குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த 6 யானைகள் கொண்ட கூட்டம் அப்பகுதியில் காந்தி, மூர்த்தி, கெபீர், சக்திவேல் ஆகியோர் குடியிருந்த பங்களாவின் ஜன்னல் கதவுகளை உடைத்து குட்டி யானை வீட்டிற்குள்ளே புகுந்து, வீட்டில் இருந்த பாத்திரங்கள், கட்டில், பீரோ, தொலைக்காட்சி ஆகியவற்றை சேதப்படுத்தியது.



வீட்டின் பின்புறமாக தப்பிச்சென்ற காந்தி என்பவர் அருகிலிருந்த பொதுமக்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு உதவிக்கு அழைத்தார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டடப்பட்டது. இதனிடையே, தங்களுக்கு காட்டு யானைகளிடமிருந்து பாதுகாப்பு வழங்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தொடர்ந்து ஒருவாரமாக முகாமிட்டுள்ள காட்டு யானைகளை கும்கி யானை உதவியுடன் அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.



Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...