முறையான ஊதியம் வழங்கக் கோரி ஒப்பந்த துப்புரவுப் பணியாளர்கள் இரண்டாம் நாளாக வேலை நிறுத்தம்

முறையான ஊதியம் மற்றும் சட்டப்படியான தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாநகராட்சி ஒப்பந்த துப்புரவுப் பணியாளர்கள் இன்று இரண்டாம் நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



2016-17 ஆண்டுக்கான முறைப்படியான ஊதியம், சட்டப்படியான போனஸ் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாநகராட்சி ஒப்பந்த துப்புரவுப் பணியாளர், ஓட்டுநர், கிளீனர் கோயமுத்தூர் லேபர் யூனியன், தமிழ்நாடு அண்ணல் அம்பேத்கர் சுகாதார துப்புரவு மற்றும் பொதுப்பணியாளர் சங்கம் மற்றும் ஜனசக்தி மஸ்தூர் சபா போன்ற அமைப்பினர்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

தொடர்ந்து, இன்று இரண்டாம் நாளாக கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் ஒப்பந்த துப்புரவுப் பணியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



இதுகுறித்து, ஏஐடியுசி தலைவர் என்.செல்வராஜ் கூறுகையில், 'வியாழனன்று மாநகராட்சி சார்பாக சங்க நிர்வாகிகளோடு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் முறையான சம்பளம், போனஸ் வழங்குவது தொடர்பாக ஆய்வு செய்ய ஒரு குழு அமைக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது.



மேலும், அனைத்து மண்டலங்களிலும் குழுக்கள் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். குழு அமைப்பது பற்றிய தகவல் அரசு சார்பாக வெளியிட வேண்டும் என்றும் கேட்டோம். ஆனால், அதற்கு மாநகராட்சி சார்பாக முறையான ஒப்புதல் கிடைக்கவில்லை. கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேரும் வரை போராட்டம் தொடரும்' என்றார்.

ஏஐடியுசி நிர்வாகி ஆர்.தேவராஜ் கூறுகையில், 'டெங்கு போன்ற நோய்கள் பரவிவரும் சூழலில் எங்கள் போராட்டத்தால் நகரில் குப்பைகள் அனைத்து இடத்திலும் சுத்தம் செய்யாமல் கிடக்கிறது. மாநகராட்சி நிர்வாகம் மேலும் தாமதிக்காமல் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மாநகராட்சி அலுவலகம் முன்பாக அனைத்து குப்பைகளும் கொட்டப்படும்' என்று எச்சரித்தார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...