வங்கிகளை தனியார் மயமாக்கும் முயற்சியைக் கண்டித்து பாராளுமன்ற உறுப்பினரிடம் வங்கி ஊழியர்கள் மனு

வங்கிகளை தனியார் மயமாக்கும் முயற்சியைக் கண்டித்து பாராளுமன்ற உறுப்பினர் நாகராஜனிடம் இன்று கனரா வங்கி அதிகாரிகள் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

பொதுத் துறை நிறுவனமான வங்கியை தனியார் மையமாக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும். பொதுத் துறை வங்கிகள் நாட்டின் சொத்துக்கள். அவற்றை தனியார்க்கு தாரைவார்க்க அனுமதிக்கக் கூடாது. இதுகுறித்து முறையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கி ஊழியர்களின் கோரிக்கை மற்றும் கருத்துக்களை கேட்டறிந்த பாராளுமன்ற உறுப்பினர் நாகராஜன் இதுகுறித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதாக உறுதி அளித்துள்ளார்.

இந்நிகழ்வின் போது, வங்கிகள் சங்கத்தின் மண்டல செயலாளர் நந்தகோபால், பொறுப்பாளர்கள் ராகவேந்திரன், ஈஸ்வர், பரணிதரன், ரங்கநாதன், சந்திரசேகர், ராஜிவ் ஆகியோர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...