கைத்தறி நெசவாளர்கள் புதிய நல்வாழ்வு காப்பீட்டுத் திட்டத்தில் விண்ணப்பிக்க அழைப்பு

கைத்தறி நெசவாளர்களுக்கென மகாத் காந்தி புங்கர் பீமா யோஜனா எனும் காப்பீட்டு திட்டம், மத்திய, மாநில அரசு மற்றும் இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்துடன் இணைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, கைத்தறி நெசவாளர்களுக்கு ஏற்படும் இயற்கை மரணம், விபத்தினால் மரணம் அல்லது விபத்தினால் நிரந்தர ஊனம் அல்லது விபத்தினால் ஏற்படும் பகுதி ஊனம் உள்ளிட்டவற்றிற்கு காப்பீட்டு தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கூட்டுறவு அமைப்பில் உள்ள கைத்தறி நெசவாளர்கள், கூட்டுறவு அமைப்பு சாரா கைத்தறி நெசவாளர்கள், உபதொழில் செய்பவர்களும் சேர்ந்து பயனடைந்து வருகின்றனர்.

மகாத்மா காந்தி புங்கர் பீமா யோஜனா திட்டத்துடன் தற்பொழுது மத்திய அரசு புதிதாக பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா மற்றும் பிரதான் மந்திரி சுரன்ஷா பீமா யோஜனா என இரண்டு காப்பீட்டு திட்டங்களை 2017- 2018 முதல் நடைமுறைப்படுத்த உள்ளது.

இப்புதிய திட்டத்தின் கீழ் 18 வயது முதல் 50 வயது வரை உள்ள நெசவாளர்கள் மரணம் அடைந்தால் ரூ.2 லட்சம் ஆயுள் காப்பீட்டுத் தொகையும், நிரந்தர ஊனம் அடைந்தால் ரூ.2 லட்சமும், பகுதி ஊனம் அடைந்தால் ஒரு லட்சம் ரூபாயும் காப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. 50 வயது முதல் 59 வரை உள்ளவர்களுக்கு ஆயுள் காப்பீட்டு தொகை ரூ.60 ஆயிரம் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்திற்கு கைத்தறி நெசவாளர்கள் தொகை ஏதும் செலுத்த வேண்டியதில்லை. எனவே, தகுதியுடைய கைத்தறி நெசவாளர்கள், கைத்தறி உபதொழில் செய்பவர்கள், தங்கள் மாவட்டத்தில் உள்ள கைத்தறி மற்றும் துணி நூல் துறை சரக உதவி இயக்குநரை வரும் அக்டோபர் 27ம் தேதிக்குள் தங்கள் புகைப்படம், வங்கிக் கணக்கு, ஆதார் அட்டையை வங்கி கணக்குடன் இணைந்த விபரம் மற்றும் நெசவாளர் என்பதற்கான சான்றிதழுடன் அணுக வேண்டும்.

சரக உதவி இயக்குநர் அலுவலக முகவரி:- உதவி இயக்குநர், கைத்தறி மற்றும் துணிநூல், 23 பாரதி பார்க், 2-வது குறுக்கு தெரு, சாய்பாபா காலனி, கோவை- 610011.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...