மது அருந்த பணம் கேட்டு வாலிபரை தாக்கிய காவல்துறை அதிகாரி கைது

கோவை அருகே மது அருந்த பணம் கேட்டு வாலிபரை தாக்கிய காவல்துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். 

கோவை மாவட்டம், கோவில்பாளையத்தை அடுத்த ஏ.எஸ். குளம் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜ் (38). பண்ணை தொழில் செய்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன் (24). இவர் கோவைப்புதூரில் அமைந்துள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை (4-வது பட்டாலியன்)ல் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வந்தார்.

தீபாவளி தினத்தன்று ஏ.எஸ். குளம் பேருந்து நிலையம் அருகே தமிழ்செல்வன், தனது சகோதரர் மோகன் பிரபாகரன் (26) மற்றும் 3 நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார். அப்போது அங்கு சென்ற நடராஜிடம் மரு அருந்த பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து, இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த தமிழ்செல்வன் மற்றும் அவரது சகோதரர் மோகன் பிரபாகரன் ஆகிய இருவரும் நடராஜை தாக்கியுள்ளனர்.

இது தொடர்பாக, நேற்று (வியாழனன்று) காலை கோவில்பாளையம் காவல் நிலையத்தில் நடராஜ் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தமிழ்ச்செல்வன் மற்றும் அவரது சகோதரரை கைது செய்து சிறையிலடைத்தனர்.

பொதுமக்களை மது அருந்த பணம் கேட்டு மிரட்டியதோடு, தாக்கிய காவல்துறை அதிகாரியை கைது செய்த சம்பவம் கோவில்பாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...