கோவை மாவட்ட ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் அக்.25 அன்று சிறப்பு கிராம சபைக் கூட்டம்



கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து வரும் அக்டோபர் 25ம் தேதியன்று சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது என கோவை மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன்  தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர்  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கோவை மாவட்டத்தில் உள்ள மதுக்கரை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மாவுத்தம்பதி, அன்னூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட குப்பனூர், ஆனைமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பில்சின்னம்பாளையம், காளியாபுரம், கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பனப்பட்டி, கப்பளாங்கரை, பொள்ளாச்சி (வடக்கு) ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒக்கிலிபாளையம், மூலனூர், கிட்டசூரம்பாளையம், சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கம்மாளபட்டி உள்ளிட்ட ஊராட்சிகளில் 2016-17 ஆம் ஆண்டிற்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து அக்டோபர் 16 முதல் 25ம் தேதி வரை சமூக தணிக்கை மேற்கொள்ள ஊரக வளர்ச்சி சமூக தணிக்கை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

மேற்படி, சமூகத் தணிக்கை தொடர்பான அறிவுரைகள் குறித்த தகவல் வழங்க சிறப்பு கிராமசபைக் கூட்டம் வரும் அக்டோபர் 25ம் தேதியன்று காலை 11 மணியளவில் நடைபெறவுள்ளது.

இந்த சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் தவறாமல் கலந்துகொண்டு பயனடையுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...