கோவையில் கடைபிடிக்கப்பட்ட காவலர் வீர வணக்க நாள் - 72 குண்டுகள் முழங்க அனுசரிப்பு

கடந்த 1954-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 21-ம் தேதி சீன ராணுவத்துடனான போரின் போது மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த 10 காவலர்கள் லடாக் பகுதியில் வீரமரணம் அடைந்தனர்.



அவ்வாறு போரின் போதும், கலவரங்களின் போதும் உயிர் நீத்த காவலர்களை நினைவுகூறும் விதமாக கடந்த 1959 ஆம் ஆண்டு முதல் அக்டோபர் 21-ம் நாள் காவலர்களுக்கு வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டு வருகின்றது.

அதன்படி இன்று நாடு முழுவதும் உள்ள காவலர்கள் காவலர் வீர வணக்க தினத்தை அனுசரித்து வருகின்றனர்.

கோவை மாவட்ட காவல் துறை சார்பில் இன்று காலை பாப்பநாயக்கன் பாளையம் பகுதியில் உள்ள காவலர் பயிற்சிப்பள்ளி மைதானத்தில் காவலர்களுக்கான வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.

மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், காவல்துறை அதிகாரிகள் உயிரிழந்த காவலர்களுக்காக நிறுவப்பட்டுள்ள நினைவு தூணிற்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.



தொடர்ந்து, காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை செய்து 72 குண்டுகளை  விண்ணில்  முழங்கி மரணமடைந்த வீரர்களுக்கு அஞ்சலியை உரித்தாக்கினர். இந்த நிகழ்ச்சியில் துணை ஆணையர்கள் லட்சுமி, பெருமாள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.



Newsletter

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...