வால்பாறையில் வனத்துறை பயிற்சி மையத்தை சேதப்படுத்திய காட்டு யானைகள்

வால்பாறை பகுதியில் கடந்த சில மாதங்களாக பொது மக்களின் குடியிருப்பு பகுதிகளில் நுழையும் காட்டு யானைகள் வீடுகளையும், உடமைகளையும் சேதப்படுத்தி வருகின்றது.

இந்நிலையில் கடந்த வாரம் பன்னிமேடு அருகே உள்ள சங்கிலிரோடு எஸ்டேட் பகுதியில் முகாமிட்டிருந்த காட்டு யானைகள் அப்பகுதியில் இருந்த நான்கு பங்களாக்களை சேதப்படுத்தியதுடன் வீட்டில் இருந்த தொலைக்காட்சி, கட்டில், பீரோ ஆகியவற்றை சேதப்படுத்தியது.

இதனைத்தொடர்ந்து, அப்பகுதியில் இருந்து இடம் பெயர்ந்த காட்டு யானைகள் நேற்று இரவு நல்லமுடி பகுதியில் வனத்துறை பயிற்சி மையத்தின் நான்கு சுவர்களையும் இடித்து அங்கிருந்த மேசை, நாற்காலி ஆகியவற்றை உடைத்து சேதப்படுத்தியது. 



பின், சம்பவ இடத்தில் திரண்ட வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் கூச்சலிட்டும், தீப்பந்தங்களைக் கொண்டும் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.



காட்டு யானைகள் கொண்ட கூட்டம் குடியிருப்புகளின் அருகாமையில் உள்ள வனப்பகுதியிலேயே முகாமிட்டுள்ளதால் எந்நேரத்தில் வேண்டுமானாலும் மீண்டும் குடியிருப்புகளுக்குள் நுழையலாம் என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...