சசிக்குமார் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்கள்: உக்கடம் அருகே தேடும் போலீசார்

கோவை உக்கடம் அருகே உள்ள கழிவுநீர் கால்வாயில் இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இந்து முன்னணியின் கோவை மாநகர செய்தித்தொடர்பாளர் சசிக்குமார் (37) கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ம் தேதி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை குறித்து துடியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில் வழக்கில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் வழக்கு சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டது.

தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் விசாரணையில் அபுதாகிர் மற்றும் சதாம் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். மேலும், முபாரக் என்பவர் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டார். 

இந்நிலையில், சசிக்குமார் கொலை வழக்கில் கோவை தெற்கு உக்கடம் பகுதியைச் சேர்ந்த சுபேர் (33) என்பவரை கடந்த அக்டோபர் 12-ம் தேதி போலீசார் கைது செய்து, நீதிமன்ற அனுமதியுடன் 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அப்போது அவர், சசிக்குமாரை கொலை செய்த விதத்தை நடித்துக்காட்டினார். 

மேலும், சசிக்குமாரை கொலை செய்ய பயன்படுத்திய ஆயுதங்களை உக்கடம் பைபாஸ் சாலையில் அமைந்துள்ள நாய்கள் கருத்தரிப்பு தடுப்பு மையம் அருகே உள்ள கழிவு நீர் கால்வாயில் வீசியதாக வாக்குமூலம் அளித்தார். இதனைத் தொடர்ந்து, சசிக்குமாரை கொலை செய்ய பயன்படுத்திய ஆயுதங்களை தேடும்பணியில் போலீசார் இன்று ஈடுபட்டுள்ளனர்.



மாநகராட்சியின் கழிவு நீர் உரிஞ்சும் வாகனங்கள் மூலமாக இன்று காலை முதல் கழிவுநீர் கால்வாயில் உள்ள நீர் உறிஞ்சப்பட்டு வருகிறது. இந்த நீரை முழுவதுமாக உறிஞ்சி எடுத்தால் தான் ஆயுதங்களை கைப்பற்ற முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...