சின்னவேடப்பட்டி ஏரியை சீரமைக்க பொதுப்பணித்துறை முடிவு- விவசாயிகள் மகிழ்ச்சி

கோவையில் உள்ள சின்னவேடப்பட்டி ஏரியை சீரமைக்க வேண்டும் என்று சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில் தற்போது பொதுப் பணித்துறை சின்னவேடப்பட்டி தடுப்பணையை சீரமைக்க திட்டமிட்டுள்ளது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம், சங்கனூர் பள்ளத்தில் இருந்து தடாகம் வழியாக சின்னவேடப்பட்டி ஏரிக்கு நீர் வழிப்பாதை அமைந்துள்ளது. அவ்வாறு வரும் நீரினை ஏரியில் தேக்கி சுற்றுவட்டார பகுதி மக்கள் பயன்பெரும் வகையில் கடந்த 1950 ஆம் ஆண்டு சின்னவேடப்பட்டியில் தடுப்பணை கட்டப்பட்டது. 5 சட்டர்கள் கொண்ட இந்த தடுப்பணையில் மூன்று சட்டர்கள் நீரினை வெளியேற்றவும், இரண்டு சட்டர்கள் மணலை தடுத்து நிறுத்தவும் பயன்படுத்தப்பட்டு வந்தன.



இந்நிலையில், போதிய பராமரிப்பின்றி இந்த தடுப்பணை முற்றிலும் சேதமடைந்தது. இதனால், சின்னவேடப்பட்டி ஏரியில் நீர் வழித்தடம் அடைபட்டு சுற்றுவட்டாரப் பகுதிகளான சரவணம்பட்டி, அரசூர், கணபதி, நீலம்பூர், சின்னியம்பாளையம், கோவில்பாளையம் மற்றும் குரும்பப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான விவசாயம் பாதிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, சின்னவேடப்பட்டி நீர் வழித்தடங்களை தூர்வார வேண்டும் என்றும், தடுப்பணையை சீரமைக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். தொடர்ந்து தற்போது, சின்னவேடப்பட்டி ஏரி தடுப்பணையினை சீரமைக்கும் பொருட்டு பொதுப்பணித் துறை ரூ.30 லட்சம் ரூபாயினை ஒதுக்கியுள்ளது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...