பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் நினைவுப் போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்ற பள்ளி மாணவ, மாணவியர்கள்

பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு திமுக இளைஞர் அணி அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் பள்ளி மாணவ, மாணவியர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

திமுக இளைஞர் அணி அறக்கட்டளை சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 109வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகள் பங்கு பெறும் கட்டுரை, பேச்சு, மற்றும் கவிதை ஒப்பித்தல் ஆகிய போட்டிகள் இன்று (அக்டோபர் 21) நடைபெற்றது. 



கோவை மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு கோவை மாநகர தெற்குமாவட்ட திமுக செயலாளர்,  சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் தலைமைவகித்தார்.

இதனைத்தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்றோர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில், சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக், மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் அசன்முகமது ஜின்னா ஆகியோர் வெற்றிபெற்றோருக்கு பரிசுகளை வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தனர்.



இந்நிகழ்ச்சியில், கோவை மாநகர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் மு.முத்துசாமி, கோவை மாநகர் தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இளங்கோ, மாநகர் வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கோட்டை அப்பாஸ், அவைத் தலைவர் வெ.ந.பழனியப்பன் மற்றும் கழக முன்னணி மூத்த நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...