விவசாயிகள் பெயரில் இடைத்தரகர்கள்: கோவையில் உழவர் சந்தையை முற்றுகையிட்ட பொதுமக்கள்

விவசாயிகள் என்ற பெயரில் இடைத்தரகர்கள் உழவர் சந்தையில் புகுந்து அதிக விலைக்கு காய்கறிகளை விற்பனை செய்வதாக குற்றஞ்சாட்டி பொதுமக்கள் இன்று உழவர் சந்தையை முற்றுகையிட்டனர்.



சிங்காநல்லூர் ஹவுசின்ங் யூனிட் பகுதியில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. சிங்காநல்லூர் சுற்றுவட்டாரப்பகுதி மக்கள் திரளாக இங்கு காய்கறிகளை வாங்கிச்செல்கின்றனர்.

கோவை மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும் உழவர் சந்தையாக விளங்கி வரும் இங்கு சமீப காலமாக நிர்ணயம் செய்யப்படும் விலைபட்டியலுக்கு அதிகமான விலையில் காய்கறிகள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது.

இந்நிலையில், இன்று வழக்கம் போல காய்கறி வாங்க வந்த பொது மக்கள், உழவர் சந்தை விலைபட்டியலை விட கூடுதல் விலைக்கு காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, உழவர் சந்தை அதிகாரியான கில்டா ஸ்டீபனை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.



அப்போது விவசாயிகள் என்ற பெயரில் இடைத்தரகர்களும், வியாபாரிகளும் உழவர் சந்தையில் காய்கறி விற்பனையில் ஈடுபடுவதாகவும், சில்லறை விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படும் அதே விலைக்கு உழவர் சந்தையில் விற்பதாகவும் குற்றம் சாட்டினர்.

இது போன்று இடைத்தரகர்கள் உழவர் சந்தையில் புகுந்துவிட்டால், விவசாயிகளின் வாழ்க்கை கேள்விக்குறிக்கு உள்ளாவதுடன், பொதுமக்களும் அதிக விலை கொடுத்து காய்கறிகளை வாங்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது என்று கூறி உடனடியாக இடைத்தரகர்களை வெளியேற்ற வேண்டும். விலைப்பட்டியலில் உள்ளவாறு நியாயமான விலைக்கு காய்கறிகள் விற்பனை செய்யப்பட வேண்டும் என்று உழவர் சந்தை அதிகாரி கில்டா ஸ்டீபனிடம் மனு அளித்தனர்.



மக்களின் இந்த திடீர் முற்றுகையால் சிங்காநல்லூர் உழவர் சந்தை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...