டெங்கு ஒழிப்பு பணிகள் குறித்து தொண்டாமுத்தூர் ஒன்றியத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் ஒன்றியம் தீத்திபாளையம் ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் டெங்கு ஒழிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாவட்டம் முழுவதிலும், டெங்கு ஒழிப்பு மற்றும் கட்டுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன்படி, இன்று (22.10.2017) தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியம் தீத்திபாளையம் ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் துப்புரவு சுகாதாரப்பணிகள் தொடர்பான திடீர் கள ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், ஒவ்வொரு வீடு வீடாகச் சென்றும், குடியிருப்பு பகுதிகளைச் சுற்றிலும் பார்வையிட்டு ஏடிஸ் கொசுப்புழு வளருவதற்கான சூழலை அழிக்கும் பணியினை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் வினியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை பரிசோதித்து, குடிநீரில் தவறாமல் குளோரின் குறித்த விகிதாச்சார அளவுகளில் சேர்த்து வழங்கிட உத்தரவிட்டார்.

மேலும், ஊரக பகுதிகளில் முழு துப்புறவு சுகாதார பணிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தினர். இந்த ஆய்வின்போது உதவி இயக்குநர் (ஊராட்சி) பத்மாவதி, துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் பானுமதி உள்ளிட்ட உள்ளாட்சி மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் பலர் உள்ளனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...