குடியிருப்புகளில் தொடரும் யானைகள் ஊடுருவல் - கும்கி யானையைக் கொண்டு விரட்ட பொதுமக்கள் கோரிக்கை

வால்பாறைக்கு உட்பட்ட எஸ்டேட் குடியிருப்புப் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக காட்டு யானைகள் புகுந்து இடையூறு செய்துவருவதைத் தொடர்ந்து கும்கி யானைகளைக் கொண்டு காட்டு யானைகளை விரட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் தொடர்ந்து சில வாரங்களாக காட்டு யானைகள் தொழிலாளர்கள் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்து உடமைகள் மற்றும் ரேசன் கடை, பள்ளி சத்துணவு கூடங்கள், கடைகள் ஆகியவற்றை சூறையாடி வருகின்றன . 

இந்நிலையில், நேற்று  அதிகாலை வால்பாறை அடுத்துள்ள கல்லார் எஸ்டேட்டில் சாகுல் ஹமீது என்பவரின் டீ கடை மற்றும் அருகில் இருந்த சுரேஷ் என்பவரின் மளிகைக்கடை முன்புறத்தில் கதவு ஜன்னல்களை காட்டு யானைகள் சேதப்படுத்தியது. இதனைத்தொடர்ந்து, சத்தம் கேட்டு அங்கு வந்த பொதுமக்கள் காட்டு யானைகளை அங்கிருந்து விரட்டினர்.



அங்கிருந்து சென்ற யானைகள் அருகில் உள்ள ஈட்டியார் எஸ்டேட்டில் கலா மற்றும் சுப்பிரமணி ஆகியோர்களது வீடுகளின் ஜன்னல்களை உடைத்து வீட்டில் இருந்த பொருட்களை சேதம் செய்தன. தொடர்ந்து, அக்கம் பக்கத்தினர் கூச்சலிட்டதால் யானைகள் செய்வதறியாது தடுமாறின  .

அப்போது பாதுகாப்பின்றி திறந்த நிலையில் இருந்த கிணற்றுக்குள் குட்டி யானை எதிர்பாராத விதமாக விழுந்த நிலையில், தாய் யானையின் உதவியோடு குட்டி யானை மீட்கப்பட்டு அருகில் இருந்த வனப்பகுதிக்குள் சென்றது.



இதேப் போல், திங்களன்று தாய்முடி எஸ்டேட் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த யானைகள் சுப்பிரமணி, பாக்கியதாய், செல்வி, குருநாதன், முருகாத்தாள், லட்சுமி, சிவா, பாப்பம்மாள், மோகன், இசக்கியம்மாள், வெள்ளைத்துரை ஆகியோர்களது 11 வீடுகளை சேதப்படுத்தியது.

தொடர்ந்து, வால்பாறை பகுதியில் உள்ள எஸ்டேட் குடியிருப்புப் பகுதிகளில் காட்டு யானைகள் இரவு நேரங்களில் நுழைந்து சேதப்படுத்தி வருவதால் அவற்றை அடர்ந்த வனத்திற்குள் விரட்ட வனத்துறையினர் கும்கி யானைகளைக் கொண்டுவர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...