கோவையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்கு 4 பேர் பலி



கோவையில் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. அதனால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இதுவரை 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தநிலையில், இன்று மேலும் நான்கு பேர் பலியாகியுள்ளனர். 

கோவை காந்திபுரம் பகுதியை சேர்ந்த வினோத் சர்மா என்பவரது மகள் சுவாதி (24) தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவருக்கு கடந்த 4 நாட்களுக்கு முன் காய்ச்சல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து, சுவாதி அப்பகுதியில் உள்ள  தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது ரத்த மாதிரிகளை பரிசோதித்த மருத்துவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதை உறுதி செய்தனர். மேலும், நேற்று மாலை மருத்துவமனை நிர்வாகத்தால் அவரை காப்பாற்ற முடியாது என்றும் வீட்டிற்கு அழைத்துச்செல்லலாம் என்றும் கூறினர். 

தொடர்ந்து, சுவாதியின் பெற்றோர் அவரை வீட்டிற்கு அழைத்துச்சென்றனர். வீட்டிற்கு செல்லும் வழியியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

பொள்ளாச்சியை சேர்ந்தவர் நாகப்பன். இவரது மகள் சந்தியா (10) காய்ச்சல் காரணமாக பொள்ளாச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்தார். 



இதே போல், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த கருப்பசாமி (34) என்பவரும், தாராபுரம் பகுதியை சேர்ந்த சத்யா (27) என்பவரும் நேற்று கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர்கள் இருவரும் உயிரிழந்தனர். 

Newsletter

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...