அதிக அளவு ஏற்றுமதி செய்த தனியார் நிறுவனத்திற்கு விருது

கோவை, அக்டோபர் 28: கோவையில் செயல்பட்டு வரும் சொடலமுத்து அன்ட் கோ நிறுவனத்திற்கு சிறப்பு  ஏற்றுமதி விருதை கேரள அமைச்சர் வழங்கி கவிரவித்தார். 



கோவையை மையமாகக் கொண்டு ஏராளமான நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் வெளிநாடுகளுக்கு அதிகளவிலான வர்த்தகத்தை செய்து வருகின்றன சில நிறுவனங்கள். அந்த வகையில் வெளிநாடுகளுக்கு, அதிகளவில் ஏற்றுமதி செய்யும் நிறுவனத்திற்கு, ஆண்டுதோறும் பொறியியல் ஏற்றுமதி மேம்பாடு கவுன்சில் சார்பில் விருது வழங்கப்பட்டு வருகிறது. 

அந்த வகையில், 2015-2016 ஆம் ஆண்டில், அதிகளவில் ஏற்றுமதி செய்த சொடலமுத்து அன்ட் கோ நிறுவனம் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது. இந்த விருதை அந்நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் திரு. கே.எஸ். பாலமுருகனிடம், கேரள தொழில்துறை அமைச்சர் திரு. ஏ.சி. மொய்தீன் வழங்கினார். 

1970-ம் ஆண்டு முதல் காகிதக் கோண்கள், குழாய்கள் உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கும் இயந்திரங்களை ஏற்றுமதி செய்து வருகிறது. இந்தியாவில் பிரபலமான நிறுவனங்களில் ஒன்றான இந்த நிறுவனம்,  அமெரிக்கா, இத்தாலி, பிரேசில், மெக்சிகோ, ரஷ்யா, எகிப்து, துருக்கி, தென்னாப்ரிக்கா உள்ளிட்ட 60 நாடுகளுக்கு தங்களது தயாரிப்புகளை ஏற்றுமதி செய்து வருகிறது. 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...