தூய்மையான பசுமையான தீபாவளியை கொண்டாடியவர்களுக்கு மாநகராட்சி சார்பில் பரிசுகள் வழங்கி கவுரவிப்பு


கோவை, அக்டோபர் 28: சுற்றுசூழல் மாசுபடாத வகையில் பசுமை தீபாவளி கொண்டாடியவர்களுக்கு கோவை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் மருத்துவர்.க.விஜயகார்த்திகேயன் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார். 

கோவை மாநகராட்சி சார்பாக சுற்றுசூழல் மாசுபடாமல் பசுமையான தீபாவளி கொண்டாட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் ‘பசுமை தீபாவளி’ கொண்டாடும் நபர்களுக்கு பாராட்டி பரிசளிக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் அறிவித்திருந்தார். அதன்படி பசுமை தீபாவளியை கொண்டாடிய பொதுமக்கள், மாணவர்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களிடமிருந்து 140 பரிந்துரைகள் வாட்ஸ் ஆப் மூலம் பெறப்பட்டன. 

இவர்களில், சிலர் சுற்றுசூழல் மாசுபடாத வகையில் ஏழைகள் மற்றும் பழங்குடி மக்களுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கி பட்டாசு வெடிக்காமல் பசுமை தீபாவளி கொண்டாடுவது போன்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பியிருந்தனர். பசுமை தீபாவளி கொண்டாட்டங்கள் சம்பந்தமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனைத்தும் ஆராயப்பட்டு இறுதியாக 14 தனிநபர்கள், 6 தன்னார்வ நிறுவனங்கள், 9 தனியார் நிறுவனங்கள், 4 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் 1 குடியிருப்பு சங்க நிர்வாகிகள், ஆகமொத்தம் 34 பரிந்துரைகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் அனைவருக்கும் ஆணையாளர் க.விஜயகார்த்திகேயன் பாராட்டு தெரிவித்து, பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார். 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...