கோவையில் மகனுடன் தீக்குளிக்க முயன்ற தந்தை: பத்திரிக்கையாளர்கள் காப்பாற்றியதால் உயிர் தப்பினர்

கோவை, அக்டோபர்.28: கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு, கொடுத்த கடன் வராததால், மகனுடன் ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை, கருமத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் குமார். விசைத்தறி உரிமையாளரான இவர், அதே பகுதியைச் சேர்ந்த நகை கடை உரிமையாளரான மோகன்குமார் என்பவருக்கு தொழில் நிமித்தமாக 10 லட்சம் ரூபாய் கடன் கொடுத்துள்ளார். கடன் கொடுத்து மூன்று ஆண்டுகள் ஆகியும் பணத்தை திருப்பி தராமல் மோகன்குமார் தாமதித்து வந்துள்ளார்.

பின்னர், இது தொடர்பாக கருமத்தம்பட்டி காவல்நிலையத்தில் குமார் புகார் அளித்துள்ளார். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் குமார் மனமுடைந்துள்ளார். இதையடுத்து, கோவை எஸ்.பி. ஆபிஸில், தனது 7 வயது மகனுடன் குமார் இன்று காலை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.



இதுதொடர்பாக, புகார் அளிக்க வந்த அவரை காவலர்கள், குடிகாரர் என புறக்கணித்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த அவர் மறைத்து வைத்திருந்த மண்ணென்ணையை தன் மீதும், தன் 7 வயது மகனின் உடல் மீதும் ஊற்றியதுடன், தீப்பற்ற வைக்க முற்பட்டார்.

அப்போது அங்கிருந்த தனியார் தொலைக்காட்சியின் நிருபர் சொர்ணகுமார் என்பவர், அவரிடமிருந்து தீப்பெட்டியை பிடுங்கி அவரைக் காப்பாற்றினார்.

இதைத்தொடர்ந்து, அங்கு வந்த காவல் துறையினர் அவ்விருவரையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.



Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...