பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்க மு.க.ஸ்டாலின் கோவை வருகை

பேரறிஞர் அண்ணாவின் 109வது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற போட்டியில்  வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்க திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று கோவை வந்தார்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் திமுக இளைஞரணி அறக்கட்டளை சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 109 வது பிறந்த நாள்விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் இன்று நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டிகள் நாளை (அக்டோபர் 29) நடைபெறவுள்ளது.

இதில் வெற்றி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்ற உள்ளார். இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இன்று கோவை விமானநிலையம் வந்த மு.க.ஸ்டாலினுக்கு திமுக-வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதைத்தொடர்ந்து, திருச்சி சாலை, ஒலம்பஸ் அடுத்த ருக்மணி நகரில், மறைந்த தொழில் அதிபர் பொள்ளாச்சி மகாலிங்கத்தின் மனைவி மாரியம்மாள் மறைவிற்கு, அவரது வீட்டிற்கு சென்று மகாலிங்கம் மகன் மாணிக்கம், மருமகன் கிருஷ்ணராஜ் வானவராயர் மற்றும் பாலசுப்பிரமணியம் ஆகியோரிடத்தில் துக்கம் விசாரித்த மு.க.ஸ்டாலின், மாரியம்மாள் திருவுருவ படத்திற்கு மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினார். இதனைத்தொடர்ந்து, சாலை மார்க்கமாக அவர் மேட்டுப்பாளையம் சென்றார்.



இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் தேவர் குருபூஜையில் பங்கேற்பதற்காக கமுதி, பசும்பொன்னிற்கு செல்கின்றார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...