வால்பாறை அருகே எஸ்டேட் குடியிருப்புப் பகுதியில் சிறுத்தை மோதி சிறுவன் காயம்

கேரள எல்லைப்பகுதியான மளுக்கப்பாறை எஸ்டேட் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சிறுத்தை சிறுவன் மேல் மோதிச் சென்றதால் 12 வயது சிறுவனுக்கு காயம் ஏற்பட்டது.

வால்பாறையை அடுத்துள்ள மளுக்கப்பாறை எஸ்டேட் தமிழக- கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது. இங்கு ரோப்பமட்டம் என்ற இடத்தில் கடந்த சனிக்கிழமையன்று கோழியை வேட்டையாட சிறுத்தை வந்துள்ளது. இந்நிலையில், அப்பகுதியில் வசிக்கும் வெள்ளைச்சாமி என்பவரது மகன் தினேஷ்குமார் (12) சிறுநீர் கழிப்பதற்காக வெளியே வந்துள்ளார். அப்போது கோழியை பிடித்து விட்டு திரும்பிய சிறுத்தை அச்சிறுவனின் மேல் மோதிச் சென்றது. இதில் நிலைகுலைந்த தினேஷ்குமார் கீழே விழுந்ததில் நெற்றியில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் உருளிக்கல் மத்திய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 



வால்பாறை பகுதியில் தொடர்ந்து குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து கால்நடைகள் மற்றும் கோழிகளை தாக்கி கொன்று வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...