டெங்கு ஒழிப்பு பணிகள் குறித்து கோவையில் தமிழக அரசு முதன்மை செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் ஆய்வு

கோவை, அக்டோபர் 29: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக அரசின் முதன்மை செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால், டெங்கு ஒழிப்பு பணிகள் தொடர்பாக வருவாய் துறை, உள்ளாட்சித்துறை மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (அக்டோபர் 29) டெங்கு ஒழிப்பு பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் முன்னிலையில் தமிழக அரசின் முதன்மை செயலாளரும் வருவாய் நிர்வாக ஆணையருமான சத்யகோபால் வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்களுடன் விரிவான ஆய்வு மேற்கொண்டு தெரிவித்ததாவது:-



தமிழ்நாடு அரசு டெங்கு ஒழிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளாக வருவாய்துறை, உள்ளாட்சித்துறை மற்றும் சுகாதாரத்துறை உள்ளிட்டவற்றை ஒருங்கிணைத்து பல்வேறு பணிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது. 50 வீடுகளுக்கு ஒரு டெங்கு ஒழிப்பு பணியாளரும், 500 வீடுகளுக்கு மருத்துவத்துறையை சார்ந்த அலுவலர்களும் தினந்தோறும் கள ஆய்வு மேற்கொண்டு குடியிருப்புகளில் உள்ள ஏடிஸ் லார்வாக்களை ஒழித்தும், கொசுப்புழு வளருவதற்கான காரணிகளை அழித்தும் வருகின்றனர்.



மேலும், ஒரு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு ஒர் துணை ஆட்சியர் நிலையிலுள்ள அலுவலர்கள் மூலம் திடீர் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி, சுகாதாரத்துறையின் மூலமும், தன்னார்வலர்கள், பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் மூலமும் பொதுமக்களிடையே விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றது என முதன்மை செயலாளரும் வருவாய் நிர்வாக ஆணையருமான சத்யகோபால் தெரிவித்தார்.

முன்னதாக முதன்மை அவர், வடவள்ளி அண்ணா பல்கலைகழகத்தில் புதிய எளிமையான மற்றும் அதிக பயன்தரக்கூடிய முறையில் மரக்கன்று நடும் திட்டத்தினை தொடங்கி வைத்து, பி.என்.புதூர் பகுதியில் டெங்கு ஒழிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், அப்பகுதியின் சுகாதாரம் குறித்தும் பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.



இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், சார் ஆட்சியர் காயத்ரிகிருஷ்ணன், உதவி ஆட்சியர் சரண்யாஹரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜ், மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி ஆகியோர் பங்கேற்றனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...