முத்தண்ணன் குளத்தில் தொடரும் தூய்மைப் பணி


கோவை மாவட்டத்தில் அழிந்துவரும் நீர்நிலைகளை மீட்டெடுக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வரும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் தொடர் களப்பணிகள் மூலம் பல்வேறு குளங்களையும், நீர்நிலைகள், ஆக்கிரமிப்புகளையும் அகற்றி வருகின்றனர்.

அதன்படி, இன்று (அக்டோபர் 29) 38-வது வார களப்பணியாக முத்தண்ணன் குளம் என்றழைக்கப்படும் குமாரசாமி குளத்தில் தூய்மைப் பணிகள் நடைபெற்றது.

கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு மற்றும் இஎப்ஐ கோயம்புத்தூரால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த கணப்பணியில் கோவை மாநகராட்சி, ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் மற்றும் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த களப்பணியில் 2 டன் அளவுள்ள பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் அகற்றப்பட்டன.

இதனைத்தொடர்ந்து, கோவை வேளாண்மைப் பல்கலைக் கழகமும், அமெரிக்காவின் The Nature Conservancy அமைப்பும் இணைந்து குளங்களை சீரமைக்கும் ஆய்வுப் பணியின் முதற்கட்ட கலந்தாய்வினை தன்னார்வலர்களுடன் மேற்கொண்டனர்.

பின், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் தன்னார்வலர்கள் வெள்ளலூர் ராஜ வாய்க்கால் சீரமைக்கும் பணியை துரிதப்படுத்த வேண்டி ஊரகவளர்ச்சி, உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் திரு. எஸ்.பி. வேலுமணியிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதுகுறித்து, விரைந்து நடவடிக்கைகள் எடுக்க ஆவண செய்யப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...