காற்றில் பறக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தின் தடை - பேனருக்கு பதிலாக பலூனில் அலப்பறை

கோவை, அக்டோபர் 31: கோவை காந்திபுரம் மேம்பாலம் திறப்பு விழாவை முன்னிட்டு, முதலமைச்சர், துணை முதலமைச்சர் படங்களுடன் பிரமாண்ட பலூன் பறக்கவிடப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

காந்திபுரம் பகுதியில் 1,752 மீட்டர் நீளத்தில் பிரம்மாண்ட பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் திறப்பு விழா நாளை நடைபெறுகிறது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இந்த பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கின்றார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் ஆகியோர் உருவ படத்துடன் கூடிய பிரம்மாண்ட பலூனை அமைச்சர் வேலுமணி பறக்கவிட்டார். 



உயிருடன் இருப்பவர்கள் புகைப்படங்களை பிளக்ஸ், பேனர் போன்றவற்றில் விளம்பரம் செய்யக்கூடாது என நீதிமன்ற உத்திரவிட்டிருந்தது. இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக பலூன் மூலம் இவர்களின் புகைப்படங்கள் போடப்பட்டு பிரச்சாரம் செய்யப்பட்டு இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. அதேவேளையில், அண்ணா புகைப்படத்துடனும், இரட்டை இலை சின்னத்துடனும் பாலம் முழுவதும் அ.தி.மு.க. கொடிகள் கட்டப்பட்டு இருப்பது குறிப்பிடதக்கது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...