அனைத்து மாவட்டங்களிலும் ஆளுநர் ஆய்வு மேற்கொண்டால் வரவேற்பேன் - திண்டுக்கல் சீனிவாசன்

கோவை, நவம்பர் 16: அனைத்து மாவட்டங்களிலும் ஆளுநர் ஆய்வு மேற்கொண்டால் வரவேற்பேன் என்றும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இருக்கும் போது ஆளுநர் ஆய்வு நடத்தி இருந்தாலும் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவையில் நடைபெற உள்ள எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிற்கான கால்கோள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விமானம் மூலம் கோவை வந்தார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஆளுநர் ஆய்வு குறித்து உள்ளாட்சிதுறை அமைச்சரின் கருத்தே தனது கருத்து. தூய்மை இந்தியா திட்டத்தில் ஆளுநர் நல்ல பணிகளையே செய்துள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்த போதும் ஆளுநர் ஆய்வு நடத்தி இருந்தால் ஏற்று கொண்டிருக்க வேண்டும். 

அனைத்து மாவட்டங்களிலும் ஆளுநர் ஆய்வு மேற்கொண்டால் வரவேற்பேன். அமைச்சர் இல்லாமல், அரசு அதிகாரிகளை வைத்து மட்டும் கூட்டம் நடத்தியதால் மாநில உரிமை பறிபோகாது. மத்திய அரசு திட்டத்தின் செயல்பாட்டையே ஆளுநர் ஆய்வு மேற்கொண்டு இருக்கிறார். தற்போதைய ஆளுநர் பன்வாரிலால் வேறு மாநில ஆளுநராக இருந்த இடங்களில் இது போன்ற ஆய்வு மேற்கொண்டுள்ளார் என்றார்.

இதைத்தொடர்ந்து, பா.ஜ.க தலைவர்கள் பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் வானதி சீனிவாசன் ஆகியோர் அதிமுக கட்சி அழிந்துவிடும் என்றும், ஊழல் ஆட்சி எனக் கூறியிருப்பது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், அதிமுக கட்சியை யாராலும் அழிக்க முடியாது. இது மக்களுக்கான ஊழலற்ற ஆட்சி. எதிர்வினை ஆற்றும் அளவிற்கு அவர்கள் விமர்சனம் செய்யவில்லை. கட்சிகளை பற்றி சந்தர்பம் வரும்போது விமர்சனம் செய்வோம். இவ்வாறு கூறினார். 

கோவை ஆணைகட்டியில் உடல்நலம் குன்றிய யானைக்கு சிகிச்சை அளிக்க வனத்துறை அனைத்து நடவடிக்கைகளும எடுத்த நிலையிலும், சிகிச்சை பலனின்றி யானை உயிரிழந்திருப்பது இயற்கையானது என்றும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...