அன்னூரில் 2 லட்சம் ரூபாய்க்கு மேல் திருட்டு

அன்னூர், நவம்பர் 17

கோவை மாவட்டம், அன்னூர் அடுத்த மசக்கவுண்டன் செட்டிபாளையம் பஞ்சாயத்து பொன்னேகவுண்டன் புதூரில் உள்ள அரசு மதுபானக்கடை மேற்பார்வையாளர் ரங்கசாமி இடமிருந்து  2, 76,420  ரூபாயை  இருசக்கர வாகனத்தில் வந்த முகமூடி கொள்ளையர்கள் பறித்து  சென்றனர்.

அன்னூர் அடுத்த செம்மானி செட்டிபாளையத்தைச் சார்ந்த வெள்ளிங்கிரி மகன் ரங்கசாமி(47), இவர் பொன்னேகவுண்டன் புதூரில் உள்ள அரசு மதுபானக்கடையில் மேற்பார்வையாளராக பனியாற்றி வருகிறார்.

இந்நிலையில் நேற்று இரவு 11.00 மணியளவில் கடை விற்பனையாளர் சம்பத் மற்றும் மேற்பார்வையாளர் ரங்கசாமி இருவரும் விற்பனையை முடித்துவிட்டு விற்பனையான பணம் ரூபாய் 2,76,420/-  எடுத்து கொண்டு தன் இருசக்கர வாகனத்தில் மசக்கவுண்டன்செட்டிபாளையம் சென்று கொண்டிருக்கும் போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று முகமூடி அணிந்த நபர்கள்  ரங்கசாமியின் இருசக்கர வாகனத்தின் மீது மோதி  கீழே தள்ளிவிட்டு  மதுபான விற்பனை பணத்தை பறித்து    சென்றுவிட்டார்கள். 

இது சம்மந்தமாக அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...