கோவை மத்திய சிறை வளாகத்தில் சந்தன மரங்கள் வெட்டிக்கடத்த முயற்சி : மர்ம நபர்கள் துணிகரம்

கோவை, நவம்பர். 17

பாதுகாப்பு நிறைந்த கோவை மத்திய சிறை வளாகத்தில் இன்று அதிகாலை 4 சந்தன மரங்கள் வெட்டப்பட்டு கடத்த முயற்சி நடந்துள்ளது.



கோவை மத்திய சிறை வளாகத்தில் சந்தனமரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

அங்கு உள்ள டி.ஐ.ஜி அலுவலகம் அருகே இருந்த சந்தன மரங்கள் சுமார 20 " சுற்றளவுக்கு வளர்ந்திருந்தன.

இந்த நிலையில், இன்று அதிகாலையில் சிறை வளாகத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் சந்தன மரங்களை வெட்டினர். 



 அதோடு, மரத்தை வெட்ட பயன்பட்ட ரம்பம், அரிவாள்,கடப்பாறை ஆகியவற்றை மர்ம நபர்கள் அதே இடத்தில் போட்டு விட்டு தப்பிச்சென்றுள்ளனர். .



இது தொடர்பாக, ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கோவை மத்திய சிறையின் முதல் அடுக்கில் தமிழக போலீசார், இரண்டாம் அடுக்கில் மத்திய தொழில் பாதுகாப்பு படை, மூன்றாவதாக சிறை காவலர்கள் என 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.



பாதுகாப்பு நிறைந்த மத்திய சிறை வளாகத்தில் சந்தன மரம் வெட்டப்பட்டு இருப்பதால், அதன்  பாதுகாப்பு குறித்து கேள்விக்குறி எழுந்துள்ளது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...