இளைஞரை காவு வாங்கிய எம்.ஜி.ஆர். நூற்றாண்டுவிழா நுழைவுவாயில் : முறையான அனுமதி பெறவில்லை என அதிகாரிகள் குற்றச்சாட்டு

கோவை, நவம்பர் 25  

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக கோவையில் வைக்கப்பட்ட நுழைவு வாயில் இளைஞர் ஒருவரை பலி வாங்கிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழக அரசு சார்பில் வரும் டிசம்பர் 3 - ம் தேதி கோவை வ.ஊ.சி   மைதானத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவில் தமிழக முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். விழாவுக்கான முன்னேற்பாடுகள் தற்போதே தொடங்கிவிட்ட நிலையில் அவினாசி சாலையில் விமான நிலையம் தொடங்கி வ.ஊ.சி மைதானம் வரை அலங்கார நுழைவு வாயில்கள் அமைக்கும்  பணியில் அ.தி.மு.க. தொண்டர்கள் ஈடுபட்டுள்ளனர். 



இதில் ஒரு அலங்கார நுழைவு வாயிலை ஹோப் காலேஜ் அருகில் அக்கட்சியினர் அமைத்தனர். 

இந்த நுழைவுவாயில் அமைப்பதற்காக அவினாசி சாலையின் ஒரு பகுதி தோண்டப்பட்டுள்ளது. 6 வழிச்சாலையான அவினாசி சாலையின் 2 பாதைகளை இந்த நுழைவு வாயில் ஆக்கிரமித்துள்ளது. . 

கோவை சின்னியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மகன் ரகுபதி. அமெரிக்காவில் பணிபுரியும் இவர் திருமணத்திற்கு பெண் பார்பதற்காக சமீபத்தில் கோவை வந்துள்ளார்.  நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் ஹோப்ஸ் பகுதியில் இருந்து சின்னியம்பாளையம் நோக்கி சென்றுகொண்டிருந்தார். 

இரவு நேரம் என்பதால் சாலையை ஆக்கிரமித்து நுழைவு வாயில் அமைத்தது அவர் கண்ணிற்கு தென்படவில்லை. இதனால், எதிர்பாராத விதமாக அந்த அலங்கார நுழைவு வாயிலில் மோதிய ரகுபதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 



உயிரை பலி கொடுத்து அரசு விழா நடத்த வேண்டுமா? அதிகாரிகளுக்கும், ஆளும் கட்சியினருக்கும் பொறுப்புணர்ச்சி இல்லாமல் அலங்கார நுழைவுவாயில் அமைத்ததே விபத்துக்கு காரணம் என்று சமூக ஆர்வலர்கள் பலர் குற்றம் சாட்டிய நிலையில், விபத்துக்கு காரணமான அலங்கார நுழைவு வாயில் உடனடியாக அகற்றப்படும் என்று மாநகராட்சி ஆணையர் K.விஜய கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். 

மேலும், நுழைவு வாயில் வைப்பதற்கு மாநகராட்சியிடம் எந்த அனுமதியும் பெறவில்லை என்ற பகீர் தகவலையும் அவர் வெளிட்டுள்ளார். 

இந்த சூழ்நிலையில், ஆளும் கட்சியாகின் எந்த அதிகாரிகளிடமும் முன் அனுமதி பெறாமல் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற முனைப்பு அ.தி.மு.க. வினரிடையே இருக்கும் வரை தமிழகத்தில் இது போன்ற உயிர்பலிகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும் என்று பொதுமகள் கருத்து தெரிவித்துள்ளனர். 

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...