எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக வைத்த அலங்கார நுழைவாயிலால் வாலிபர் பலியான விவகாரம் : நடவடிக்கை எடுக்க கோரி காவல் ஆணையரிடம் எம்எல்ஏ மனு

கோவை, நவம்பர் 25

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக கோவையில் வைக்கப்பட்ட அலங்கார நுழைவாயிலால் வாலிபர் பலியானதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் ஆணையரிடம் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் மனு அளித்தார்.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக அ.தி.மு.க. சார்பில் கோவை ஹோப்ஸ் பகுதியில் அலங்கார நுழைவு வாயில் வைக்கப்பட்டது. சாலையின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து வைக்கப்பட்ட இந்த நுழைவு வாயிலில் நேற்று இரவு வாகனம் மோதிய விபத்தில்  சின்னியம்பாளையம் பகுதியை சேர்ந்த ரகுபதி என்ற வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த சூழலில், விபத்துக்கு காரணமான அ.தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இன்று மாலை சிங்காநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் கோவை மாநகர காவல் ஆணையர் K. பெரியய்யா-விடம் மனு அளித்தார். 

தொடர்ந்து அவர் செய்தியாளர்களி கூறியதாவது:- 

நெடுஞ்சாலைகளில் மிகப்பெரிய அலங்கார வாயிகள் மற்றும் பேனர்கள் வைக்க கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருந்தபோதும் அ.தி.மு.க.வினர் தீர்ப்பை மதிக்காமல் பல அடி உயரத்தில் அலங்கார நுழைவு வாயில்களை கோவை மாநகராட்சி பகுதிக்குள் அமைத்துள்ளனர். 

இதனால் ஒரு வாலிபர் உயிரிழந்துள்ளார். 

மாநகர காவல்துறை ஆணையர்  இந்த பிரச்சனையில் தலையிட்டு வாலிபர் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த வாலிபருக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதியை தமிழக அரசு வழங்க வேண்டும். காவல்துறையினர் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் இருந்தால் தி.மு.க.சார்பில் போராட்டங்கள் நடத்தப்படும். 

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...