வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு பிரசுரங்கள் விநியோகிக்கும் போக்குவரத்து போலீசார்

கோவை, நவம்பர் 28

வாகன விபத்துகளை குறைக்கும் விதமாக விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை மாநகர போலீசார் வாகன ஓட்டிகளிடம் வினியோகித்தனர். 



கோவை மாநகரில் சாலை உயிரிழப்போரின் எண்ணிக்கையை குறைக்க மாநகர போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

அதன் ஒரு பகுதியாக மாநகரில் உள்ள அனைத்து போக்குவரத்து காவல் நிலைய எல்லைகளுக்குள்ளும் உள்ள முக்கிய சந்திப்புகளுக்கு வரும் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுபிரசுரங்களை வினியோகித்து வருகின்றனர். 



நேற்று மாலை பீளமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து காவல் துணை ஆய்வாளர் பாபு துண்டு பிரசுங்களை வழங்கினார்.

 

அதே போல், இன்று காலை வெரைட்டிஹால் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து காவல் துணை ஆய்வாளர் S.முருகன் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். 

இது தொடர்பாக காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 

'இந்தியாவில் நடக்கும் மொத்த விபத்துக்களில் 12 சதவிகித விபத்துகள் தமிழகத்தில் தான் நடைபெறுகிறது. இதனைத் தடுக்கும் பொருட்டு வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மாநகர காவல்துறை சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது' என்றார். 

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...