தொடர் கொலையில் ஈடுபட்டவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

கோவை, நவம்பர் 29

ஒரே இரவில் மூன்றுபேரைக் கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கோவை மாவட்டம், காரமடை அருகே புங்கம்பாளையத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதர். சென்ட்ரிங் தொழிலாளியான இவர் குடும்ப வறுமையின் காரணமாக 2013 மார்ச் 28ம் தேதியன்று உறவினர் ஆனந்தகுமார் உடன் மது அருந்திவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த இவரது நண்பரான வேலுசாமியிடம் (49) ஸ்ரீதர் செலவிற்கு பணம் கேட்டுள்ளார். வேலுசாமி பணம் தர மறுத்த நிலையில் ஆத்திரமடைந்த ஸ்ரீதர் தான் வைத்திருந்த கத்தியால் குத்தி அவரை கொலை செய்துவிட்டு அவரிடம் இருந்த 2 ஆயிரம் ரூபாயினை திருடி விட்டு தப்பினார்.

பின்னர் காரமடை கண்ணார்பாளையம் பிரிவு அருகே வந்த ஸ்ரீதர் அங்குள்ள பெட்டிக்கடையை உடைத்து பணம் திருட முயற்சித்த நிலையில், அதைக்கண்ட தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் காவலாளி ராஜேந்திரன் சத்தம் போட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஸ்ரீதர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்கிற மாரியப்பன் இருவரின் சண்டையை விலக்க முயன்றுள்ளார். அப்போது அவரையும் ஸ்ரீதர் கத்தியால் குத்தி கொலை செய்தார்.

தொடர்ந்து அங்கிருந்து காரமடை ரயில் நிலையம் அருகே சென்ற அவர் சாலையோரமாக இருந்த குடிசைக்குள் தலைமறைவாக முயற்சித்த நிலையில் குடிசைக்குள் இருந்த தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி சேகர் கூச்சலிட்டுள்ளார். அவரையும் ஸ்ரீதர் கத்தியால் குத்தி கொலைசெய்துவிட்டு தப்பினார்.

ஒரே நாள் இரவில் மூன்று பேரை கொலை செய்த இச்சம்பவம், காரமடையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் வேலுசாமி கொலை வழக்கு கோவை 5-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்திலும், சேகர் மற்றும் ரமேஷ் கொலை வழக்கு தனித்தனியாக 4-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்திலும் நடைபெற்று வந்தது.

இதில், ரமேஷ் கொலை வழக்கின் இறுதிகட்ட விசாரணை நீதிபதி விஜயா முன்னிலையில் நடந்தது. விசாரணையின் இறுதியில் கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...