ஆர்.கே. நகர் தொகுதி அதிமுக வேட்பாளராக மதுசூதனன் அறிவிப்பு

நவம்பர் 30 

ஆர்.கே. நகர் தொகுதி அதிமுக வேட்பாளராக மதுசூதனன் ஆட்சி மன்ற குழுவால் ஒருமனதாகத் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார்.

வரும் டிசம்பர் 21-ம் தேதி நடைபெற இருக்கும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட 28 பேர் விருப்ப மனு தாக்கல் செய்தனர். அதிமுக அவைத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மதுசூதனன், முன்னாள் அமைச்சர் கோகுலஇந்திரா, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச்செயலாளர் தமிழ் மகன் உசேன், தென்சென்னை மாவட்ட முன்னாள் செயலாளர் ஆதிராஜாராம், வடசென்னை வடக்கு மாவட்ட அம்மா பேரவைச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ், 42-வது வார்டு முன்னாள் உறுப்பினர் அஞ்சுலட்சுமி, 1996-ல் ஆர்.கே.நகரில் போட்டியிட்ட ஆர்.எம்.டி.ரவீந்திரஜெயன், 2016 தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட நூர்ஜகான் உள்ளிட்டோரும் மனு கொடுத்துள்ளனர். 

இதனால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட அதிமுக நிர்வாகிகளிடம் கடும் போட்டி ஏற்பட்டு நிலவியது. எனவே, வேட்பாளர்களைத் தேர்வு செய்வதற்காகச் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆட்சிமன்றக் குழு கூட்டம் நடைபெற்றது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் எம்.பி., அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர் ராஜூ, வேலுமணி மற்றும் மதுசூதனன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆட்சிமன்றக் குழுவை சேர்ந்த 8 பேர் கலந்து கொண்டுள்ளனர். ஜஸ்டின் செல்வராஜ் மட்டும் கலந்து கொள்ளவில்லை. இந்தக் கூட்டத்தில் ஆர்.கே.நகர் தொகுதி அதிமுக வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பது குறித்து ஆலோசித்தனர். 

சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்த ஆலோசனையில் மதுசூதனன் ஆட்சிமன்றக் குழுவால், ஆர்.கே. நகர் வேட்பாளராக ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.

ஆர்.கே.நகர் எனச் சுருக்கமாக அழைக்கப்படும் டாக்டர். ராதாகிருஷ்ணன் நகர் சட்டசபை தொகுதியை அதிமுகவின் கோட்டை என்றே கூறலாம். இதுவரை அங்கு நடைபெற்ற 9 சட்டசபை தேர்தல்களில் 5 முறை அதிமுக வெற்றி பெற்று உள்ளது. திமுகவும், காங்கிரசும் தலா இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளன. அதிலும், கடந்த மூன்று சட்டசபை தேர்தல்களிலும் அதிமுகவே தொடர்ச்சியாக வெற்றி பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...