கோவையில் விதிகளை மீறி எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்காக வைக்கப்பட்டப் பேனர்களை அகற்ற உத்தரவு


நவம்பர் 30

கோவையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்காக விதிகளை மீறி வைக்கப்பட்டப் பேனர்களை அகற்றச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவையில் நடைபெற உள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, கோவை - அவினாசி சாலையில் அமைக்கப்பட்ட வளைவு நுழைவு வாயில் மீது மோதிய விபத்தில் ரகு என்ற வாலிபர் உயிரிழந்தார் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக,  திமுக எம்எல்ஏ  கார்த்திக் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், ரகு மரணத்திற்கு அலங்கார வளைவுதான் காரணம் என்றாலும், மரண விசாரணைக்குள் செல்ல விரும்பவில்லை. சாலையை மறைத்து பேனர்களை வைக்க அதிகாரிகள் அனுமதித்தது எப்படி எனக் கேள்வி எழுப்பியதுடன், சாலையோரங்களில் இருக்கும் பேனர்களை அகற்ற வேண்டும். அனுமதி பெற்றிருந்தாலும், விதிகளை மீறி வைக்கப்பட்டிருந்தால்,அவற்றை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டனர். 

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...