பேஸ்புக் ரத்த தானம்: 40 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் விருப்பம்

சமூக வலைத்தளங்களில் ஒன்றான பேஸ்புக் தளத்தில் சமீபத்தில் வழங்கப்பட்ட ரத்த தானம் அம்சத்திற்கு அதிகப்படியான இந்தியர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, இந்த அம்சம் மற்ற நாடுகளிலும் வழங்கப்பட இருக்கிறது.

இந்தியாவில் ரத்த தானம் செய்பவர்களுக்கு உதவியாய் இருக்கும் நோக்கில் இந்த அம்சம் முதற்கட்டமாக இந்திய வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டது. இந்தியாவில் இதுவரை சுமார் 40 லட்சத்திற்கும் அதிகமானோர் ரத்த தானம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளனர். ரத்தம் தேவைப்படுவோருக்கு மட்டுமின்றி ரத்தம் வழங்குவோரை நிறுவனங்கள் தரப்பில் சுலபமாகத் தொடர்பு கொள்ள பேஸ்புக் டூல்கள் உதவியாய் இருக்கும் என சோஷியல் பிளட் நிறுவனத்தின் துணைத் தலைவர் நயோமி கிளெய்ட் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனைகள், ரத்த வங்கிகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் பேஸ்புக்கில் ரத்த தானம் குறித்த நிகழ்வுகளை உருவாக்க முடியும். இதன்மூலம் ரத்த தானம் செய்ய விரும்புவோரை மிக எளிமையாகத் தொடர்பு கொள்ள முடியும். 

2018-ம் ஆண்டின் துவக்கத்தில் பேஸ்புக் ரத்த தான அம்சம் வங்கதேசத்திற்கும் வழங்கப்படும், இந்தியா போன்றே வங்கதேசத்திலும் வாராவாரம் ரத்த தானம் செய்வோர் தொடர்ந்து விருப்பம் தெரிவிப்பர் என கிளெய்ட் தெரிவித்தார். ரத்த தானம் மட்டுமின்றி பேஸ்புக் தளத்தைப் பயன்படுத்தி புதிய டூல் மற்றும் அம்சங்களைப் பயன்படுத்தி மற்றவர்களைப் பாதுகாப்பாக இருக்க உதவி செய்ய முடியும் என பேஸ்புக் தெரிவித்துள்ளது. 

பேஸ்புக்கில் புதிதாக மென்டார்ஷிப் கனெக்ஷன் புரோகிராம், புதிய நிதி திரட்டும் டூல், ரத்த தான நிகழ்வு மற்றும் தற்கொலை தடுப்பு நிகழ்வு சார்ந்த அம்சங்களை வழங்கப்பட இருப்பதாகச் சமீபத்தில் பேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பர்க் தெரிவித்துள்ளார்.

மென்டர்ஷிப் மற்றும் சப்போர்ட் அம்சம் மூலம் வழிகாட்டிகள் மற்றும் உதவி பெறுவோர் இணைந்து நேரடியாகத் தொடர்பு கொண்டு, தொண்டு நிறுவனங்களின் நிகழ்வுகளில் பங்கேற்க முடியும் என கிளெய்ட் தெரிவித்தார். பேஸ்புக்கில் மேற்கொள்ளப்படும் அனைத்து நிதியும், நேரடியாகச் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அனுப்பப்படும்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...