மழையால் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் - நடிகர் கமல்ஹாசன்

நவம்பர் 30

ஒகி புயல் காரணமாக பல இன்னலுக்குள்ளாகித் தவிக்கும் கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்குத் தனது ஆழ்ந்த அனுதாபங்களை நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கை அருகே 2 நாட்களுக்கு முன் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அது மேலும் தீவிரம் அடைந்து காற்றழுத்த மண்டலமாகி அடுத்த 36 மணி நேரத்தில் புயல் சின்னமாக மாறி புயலாக தீவிரம் அடைந்துள்ளது. தற்போது 70 கி.மீ. தொலைவில் குமரி கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது. புயல் காரணமாக குமரி மாவட்டம் முழுவதும் நேற்று இரவு முதல் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. மின்கம்பங்களும் சரிந்தன. நாகர்கோவிலில் மின்சார டிரான்ஸ்பார்மரும் காற்றின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் சரிந்து விழுந்தது.

மாவட்டம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தன. வீடுகளும் சேதமடைந்தது. குமரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டது. மாவட்டத்தின் உட்பகுதிகள் மற்றும் கிராமங்களுக்கு போக்குவரத்தும் சீராக நடைபெறவில்லை. 

ஓகி புயல் காரணமாக 4 பேர் பலியாகி உள்ளனர். கன்னியாகுமரியில் மீட்புப் பணிகள் மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது புயல் விலகிச் சென்று உள்ளது. நெல்லை, குமரி மாவட்டங்களில் ஒகி புயலால் ஏற்படும் மின்விநியோக பாதிப்புகளை உடனே சீரமைக்க மின்வாரிய அதிகாரிகளுக்கு மின்பகிர்மான கழகம் ஆணைப் பிறப்பித்து உள்ளது.

இதுகுறித்து டுவிட்டரில் கமல்ஹாசன் விடுத்துள்ள பதிவில், மழையில் மிதக்கிறது கன்னியாகுமரி மாவட்டம். இன்னலுக்குள்ளாகித் தவிக்கும் மக்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் எனக் கூறி உள்ளார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...