”விளம்பர பேனரால் வாலிபர் உயிரிழந்திருப்பது ஆடம்பர அரசியலின் உச்சக்கட்டத்தைக் காட்டுகிறது”

கோவை, நவம்பர் 30

கோவையில் சாலைகளில் வைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவுகளால் வாலிபர் உயிரிழந்திருப்பது ஆடம்பர அரசியலின் உச்சக்கட்டம் என கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். 

கோவையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா அலங்கார வளைவினால் உயிரிழந்த ரகுபதி குடும்பத்திற்குத் திரு. ஈஸ்வரன் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக அரசு பேனர் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை முழுமையாக அமல்படுத்த வேண்டும். ஆர்.கே. நகர் தொகுதியில் பணம் பட்டுவாடாவை முழுமையாகத் தேர்தல் ஆணையம் தடுத்ததாகத் தெரியவில்லை. ஓட்டுக்கு எவ்வளவு பணம் கொடுத்தாலும், திமுக வேட்பாளர்தான் வெற்றிபெறுவார். எம்ஜிஆர் நூற்றாண்டு விழா அதிக செலவில் நடத்துவதை மக்கள் விரும்பவில்லை என்பதை ஆளுங்கட்சி புரிந்துகொள்ள வேண்டும். மலேசியா மணல் விவகாரத்தில் மேல்முறையீடு செய்யாமல், வெளிநாடுகளில் இருந்து மணலை இறக்குமதி செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...