நீலகிரியில் தொடர் மழை : பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு


நவம்பர் 30 

ஒகி புயல் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

இரு தினங்களுக்கு முன்பு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையானது, தற்போது வலுப்பெற்றுள்ளதால் புயலாக மாறியுள்ளது. இதன் காரணமாக, நேற்று நள்ளிரவு முதல் நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. குன்னூர் வெலிங்டன், அருவங்காடு, சிம்ஸ்பார்க், காட்டேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. காற்று வேகமாக வீசியதால், ஒருசில இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால், கிராமங்கள் இருளில் மூழ்கின . அதிகாரிகளின் உத்தரவின் பேரில் ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு, மின்சேவையை சீர்செய்தனர். 



மேலும், பல்வேறு இடங்களில் மரங்கள் சாலைகளில் சரிந்து விழுந்ததால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர் மழையின் காரணமாக, உதகை அரசு தாவிரவியல் பூங்காவில் இருந்த மிகவும் பழமையான மரம் வேரோடு விழுந்தது. இதனை மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினர். 

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...