ஆர்.கே.நகர் தொகுதியில் நடிகர் விஷால் சுயேட்சையாக போட்டி?


சென்னை, டிசம்பர் 1

ஆர்.கே.நகர் தொகுதியில் நடிகர் விஷால் சுயேட்சையாக போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்ததையடுத்து, அவர் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆர்.கே.நகர் தொகுதி காலியாக உள்ளது. இந்தத் தொகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால், அப்போது வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்ததால் தேர்தல் நிறுத்தப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, தற்போது அத்தொகுதியில் தேர்தல் வரும் டிசம்பர் 21-ம் தேதியன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இடைத்தேர்தலின் போது, போட்டியிட்ட மதுசூதனன், அதிமுக சார்பிலும் திமுக சார்பில் மருது கணேஷ் ஆகியோரும், டிடிவி தினகரன் சுயேட்சையாகவும் போட்டியிடுகிறார்கள். இவர்கள் மூவரும் இன்று வேட்புமனுத்தாக்கல் செய்தனர்.

இதனிடையே, ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத் தலைவரும் நடிகருமான விஷால் சுயேட்சையாக போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நடிகர் விஷால் இன்று வெளியிட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...