சின்னியம்பாளையம் பகுதியில் நடவு செய்யப்பட்டுள்ள மரக்கன்றுகளை ஆய்வு செய்த வைகோ

கோவை, டிசம்பர் 1

சின்னியம்பாளையம் பகுதியில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி 10 ஏக்கர் பரப்பளவில் நடவு செய்யப்பட்டுள்ள மரக்கன்றுகளை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று ஆய்வு செய்தார்.

கோவையில் தேசிய நெடுஞ்சாலைகள் விரிவாக்கத்தின் போது பல ஆயிரம் மரங்கள் அகற்றப்பட்டன. அந்த மரங்களுக்கு மாற்றாக ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மரக்கன்றுகளை நடவு செய்து பராமரிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இருப்பினும், சட்டவிதியை பின்பற்றாமல் நெடுஞ்சாலைத் துறையினர் போலியாக மரக்கன்றுகள் வைத்து பராமரிப்பதாக கணக்கு காட்டியதைத் தொடர்ந்து உயர்நீதி மன்றத்தில் மதிமுக இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன் வழக்கு தொடர்ந்தார்.

இதன் விளைவாக சின்னியம்பாளையம் அருகில் சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில் 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. தற்போது, அந்த மரக்கன்றுகள் ஐந்து அடி முதல் 10 அடிகள் வரை நன்றாக வளர்ந்துள்ளன.

இந்நிலையில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திருப்பூர் சென்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பின் கோவை வரும் வழியில் சின்னியம்பாளையத்தில் உள்ள மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ள பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

இந்நிகழ்வின் போது மதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் மோகன்குமார், அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி, இளைஞர் அணி செயலாளர் ஈஸ்வரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...