எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி கோவை புறநகர் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்


கோவை, டிசம்பர் 2

கோவை வ.ஊ.சி. மைதானத்தில் நாளை எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. அ இ அ.தி.மு.க சார்பில் நடைபெற உள்ள இவ்விழாவில் தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளனர். 

இந்த நிலையில், விழாவையொட்டி கோவை புற நகர பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக கோவை மாவட்ட போலீசார் வெளிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 

1) கேரளா மாநிலத்தில் இருந்து வரும் வாகனங்கள் வேலந்தாவலம், மலுமிச்சம்பட்டி மற்றும் செட்டிபாளையம் வழியாக பல்லடத்தை அடையவும்.

2) பொள்ளாச்சியில் இருந்து சேலம் செல்லும் வாகனங்கள் நெகமம் வழியாக பல்லடத்தை அடையவும்.

3) மேட்டுப்பாளையத்தில் இருந்து வரும் வாகனங்கள் அன்னூர் வழியாகச் செல்லவும்.

4)அவினாசி சாலை, திருச்சி சாலை, சத்தி சாலை மற்றும் பொள்ளாச்சி சாலை என மாநகர பகுதிகளுக்குள் செல்லும் சாலையில் செல்ல வேண்டிய வாகனங்கள் எல்&டி பைபாஸ் சாலையை பயன்படுத்தவும். 

இந்த போக்குவரத்து மாற்றம் காலை 6 மணி முதல் நிகழ்ச்சி முடிவடையும் வரை அமலில் இருக்கும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...