கால்நடைகளை விற்பதற்கு விதிக்கப்பட்ட தடைச் சட்டம் வாபஸ்

டிசம்பர் 2

பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், இறைச்சிக்காகப் பசு உள்ளிட்ட கால்நடைகளை விற்பதற்கு விதிக்கப்பட்ட தடையை மத்திய அரசு திரும்ப பெற்றது.

இறைச்சிக்காகப் பசு உள்ளிட்ட கால்நடைகளை விற்பதற்குத் தடை விதிக்கும் அரசாணையைக் கடந்த மே மாதம் மத்திய அரசு பிறப்பித்தது. இதற்கு, பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. மத ரீதியில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் விமர்சனங்கள் செய்யப்பட்டன. இந்த அரசாணைக்கு, சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. அதை எதிர்க்கும் வழக்கும், உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

 

பசு உள்ளிட்ட கால்நடைகளை, இறைச்சிக்காக விற்பது குறித்து மக்களிடம் இருந்து கருத்து கேட்கப்பட்டு உள்ளதாகவும், அதில், இந்தத் தடைச் சட்டத்திற்கு எதிர்ப்பு இருந்தால், அதைத் திரும்பப் பெறவும் தயாராக உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்த நிலையில், நாடு முழுவதும் பசுவதையைக் கண்டித்து பல்வேறு வன்முறைச் சம்பவங்கள் நடந்ததைத் தொடர்ந்து, இந்தத் தடை சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற்றுக் கொண்டது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...