ஆர்.கே. நகர் தேர்தல் : பாஜக வேட்பாளராக கரு. நாகராஜன் அறிவிப்பு

டிசம்பர் 02

ஆர்.கே நகர் இடைத் தேர்தலில் பாஜக சார்பில் மாநில செயலர் கரு. நாகராஜன் போட்டியிடப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவையடுத்து, ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் ஓராண்டுக்கு பிறகு வருகிற 21ம் தேதி நடைபெற இருக்கிறது. அ.தி.மு.க, தி.மு.க சார்பில் தேர்தலில் போட்டியிடக் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு அவர்கள் வேட்புமனுவும் தாக்கல் செய்து விட்டனர். முன்னதாக, பாஜக சார்பில் அறிவிக்கப்பட்ட ஆர்.கே. நகர் தொகுதி வேட்பாளர் கங்கை அமரன் தற்போது போட்டியிட மறுப்பதால் புதிய வேட்பாளரைக் களமிறக்க அக்கட்சித் திட்டமிட்டு வந்தது. 

ஆர்.கே. நகர் தேர்தலில் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தராஜனே போட்டியிடுவார் எனத் தகவல் வெளியாகி வந்தன. எம்.என்.ராஜா, கரு.நாகராஜன் ஆகியோரின் பெயர்களும் பரிசீலனையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ஆர்.கே. நகரில் பாஜக சார்பில் மாநில செயலர் கரு.நாகராஜன் போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார். இத்தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் செய்ய 4-ம் தேதி கடைசி நாள் என்பதால், அன்றைய தினம் அவர் வேட்பு மனுத் தாக்கல் செய்ய உள்ளார். 

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...