விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்டுள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பேனர்கள் குறித்து வழக்கு தொடரப்படும்- எம்.எல்.ஏ கார்த்திக்


கோவை, டிசம்பர் 3

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பேனர்கள் விதிமுறைக்கு மீறி வைக்கப்பட்டுள்ளதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்போவதாக திமுக சட்டமன்ற உறுப்பினர் ந. கார்த்திக் கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-

கோவையில் இன்று நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிற்காக விதிமுறையை மீறி பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாக கடந்த நவம்பர் 30-ஆம் தேதியன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக-வால் வழக்கு தொடரப்பட்டது. இதில், உயர் நீதிமன்ற நீதிபதிகள்போக்குவரத்து மற்றும் மக்களுக்கு இடையூறாக இருக்கும் கட் அவுட் மற்றும் பேனர்களை அகற்ற ஆணையிட்டனர்.

இதனைத்தொடர்ந்து மீண்டும் அனுமதியின்றி புதிதாக வைக்கப்பட்டுள்ள கட் அவுட் மற்றும் பேனர்களை அகற்ற உயர் நீதிமன்ற ஆணையின்படி நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் திமுக-வினர் மனு அளித்தனர். இருப்பினும், அதிமுக நிர்வாகிகளால் கோவையில் ஆயிரக்கணக்கான பேனர்கள் மற்றும் கட் அவுட்கள் 10 அடி முதல் 30 அடி உயரத்தில் விதிமுறைகளுக்கு மாறாக வைக்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற ஆணையை மதிக்காமல் வைக்கப்படும் கட் அவுட்கள், பேனர்கள் மீது நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறை மீது நீதிமன்ற வழக்கு முழு ஆதாரத்துடன் பதியப்படும்.

மேலும், கோவை அண்ணா சிலை அருகே புதிதாக ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் சிலை வைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் அனுமதி வாங்கி வைத்திருக்கிறார்களா? இல்லையா? என்பது குறித்து ஆராய்ந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...