எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு களைக்கட்டிய அவினாசி சாலை

கோவை, டிசம்பர் 03

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா இன்று வஉசி மைதானத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் கலந்துகொள்ள கோவை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் என ஆயிரக்கணக்கானோர் கோவையில் திரண்டுள்ளனர்.



நகரின் பிரதான சாலையில் ஒன்றான அவினாசி சாலையில் தொண்டர்களை உற்சாகமாக வரவேற்க ஆடல் பாடல் நிகழ்ச்சிகளும், இசைக் கச்சேரிகளும் நடைபெற்றன. தையம் நடனம், பொய்க்கால் குதிரை, பறை இசை, கேரள புகழ் செண்டை மேளம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

குறிப்பாக, எம்ஜிஆர் வேடமணிந்த நடனக் கலைஞர்கள் அவரது பாடல்களுக்கு நடனமாடி அனைவரையும் உற்சாகப்படுத்தினர். கட்சி நிர்வாகிகளின் சார்பில் நாட்டுப்புற இசைக் கச்சேரி ஆங்காங்கே நடத்தப்பட்டது. இதில், தொண்டர்களும் நடனக் கலைஞர்களோடு நடனமாடி மகிழ்ந்தனர். அவர்களுக்காக தண்ணீர் தொட்டிகளும், நடமாடும் கழிவறைகளும் ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்தது.



மேலும், ஆயிரக்கணக்கான கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் சாலையின் இரு புறங்களிலும் காத்திருந்து அமைச்சர்களை வரவேற்றனர்.



பாதுகாப்பு பணியில் ஏராளமான காவல்துறையினர் விமான நிலையம் முதல் விழா மேடை வரை ஈடுபட்டு கூட்டத்தை ஒருங்கிணைத்தனர்.



Newsletter

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...