அதிக கட்டணம் வசூலிக்கும் மாநகராட்சி கட்டணக் கழிப்பிடம்- நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி நிர்வாகம்

கோவை, டிசம்பர் 4

காந்திபுரம் புறநகர் பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் மாநகராட்சி கட்டண கழிப்பிடத்தில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோவை, காந்திபுரம் புறநகர் பேருந்து நிலையத்தில் மாநகராட்சியின் கட்டண கழிப்பிடம் குத்தகைதாரர் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாநகராட்சியின் சார்பில் சிறுநீர், மலம் கழிக்க ரூ. 1 மற்றும் குளிக்க ரூ. 3 என வசூலிக்க வேண்டும் என அதன் அருகிலேயே அறிவிப்புப் பலகையும் வைக்கப்பட்டுள்ளது.

ஆனால், இதனை குத்தகைக்கு எடுத்துள்ள நபரோ மாநகராட்சி நிர்ணயித்துள்ள விலை பட்டியலை ஒரு அட்டையினைக் கொண்டு மறைத்து, அதற்கு மாற்றாக அதிகப்படியான தொகையை வசூலித்து வருகிறார். அதாவது, சிறுநீர் கழிக்க மட்டும் 5 ரூபாய் இங்கு வசூல் செய்யப்படுகிறது.



இதுகுறித்து, அங்கு பணியில் அமர்த்தப்பட்டிருந்த நபரிடம் கேள்வியெழுப்புகையில், "மாதம் 12 ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் செலுத்த வேண்டும். மாநகராட்சி நிர்வாகமா அதனை செலுத்தும். இவ்வாறு அதிகத் தொகை வசூலித்தால் மட்டுமே அதனை செலுத்த முடியும். வேண்டுமென்றால் பயன்படுத்துங்கள், இல்லையென்றால் சாலையோரம் சென்று சிறுநீர் கழித்துக் கொள்ளுங்கள்" என்றார் கடும் கோபத்துடன்.

வாரம் தவறாமல் "அதிக தொகை வசூலித்த கட்டணக் கழிப்பிட குத்தகைதாரர் மீது நடவடிக்கை" என மாநகராட்சி நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு வரும் நிலையில் இதுகுறித்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...