தாமதமாக வந்த வால்பாறை பேருந்து- பயணிகள் அவதி


கோவை, டிசம்பர் 4

வால்பாறை செல்லும் பேருந்து இரவு நேரம் தாமதமாக வந்ததால் பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.

கோவை, காந்திபுரம் புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து இரவு 1.30 மணியளவில் வால்பாறைக்கு அரசுப்பேருந்து இயக்கப்படுவது வழக்கம். இந்நிலையில், கோவையில் 3ம் தேதியன்று நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிற்காக புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து முக்கிய பகுதிகளுக்கு அதிமுக தொண்டர்களை அழைத்து வர பேருந்துகள் மாற்றி இயக்கப்பட்டன. இதில், வால்பாறை பேருந்தும் ஒன்று.

இந்நிலையில், இரவு ஒரு மணியளவில் வால்பாறை செல்லவேண்டிய பேருந்து சேலத்திற்கு சென்றிருந்ததால் குறிப்பிட்ட நேரத்திற்கு காந்திபுரம் வந்தடையவில்லை. பிற பகுதிகளுக்கு செல்ல வேண்டிய பேருந்துகளும் சேலம், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிற்காக அனுப்பிவைக்கப்பட்டிருந்தன. 

பின், தாமதமாக 3 மணியாளவிலேயே பேருந்து நிலையத்தை வந்தடைந்தது. இதனால் இந்த பேருந்தை எதிர்பார்த்து காத்திருந்த வால்பாறை பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

இதுகுறித்து, வால்பாறை செல்லவிருந்த பெண் பயணி ஒருவர் கூறுகையில், "ஒரு வயது குழந்தையுடன் நீண்ட நேரமாக பேருந்திற்கு காத்துக்கொண்டு இருக்கிறேன். வழக்கமாக ஒரு மணியளவில் வால்பாறைக்கு புறப்படவேண்டிய பேருந்து இன்னும் இங்கு வந்தடையவில்லை.

சேலம் சென்றிருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த பேருந்தில் சென்றால் தான் காலை குறிப்பிட்ட நேரத்தில் பணிக்கு செல்ல முடியும். மாற்றுப் பேருந்தும் இயக்கப்படவில்லை" என்றார்.

இதுகுறித்து பேருந்து நிலைய அதிகாரி கூறுகையில், "முதலமைச்சர் வருகையையொட்டி பெரும்பாலான பேருந்துகள் மாற்றி இயக்கப்பட்டுள்ளன. தற்போது பேருந்து நிலையத்தில் உள்ள பேருந்துகள் சில பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது. ஆனால், வால்பாறை செல்ல மாற்றுப்பேருந்தை இயக்க முடியாது. ஊசிமுனை வளைவுகள் அதிகமுள்ள அப்பகுதிக்கு அனுபவம் வாய்ந்த ஓட்டுநர் தேவை. அதனால், சேலம் சென்றுள்ள வால்பாறை பேருந்து வந்தால் மட்டுமே வால்பாறைக்கு பேருந்து இயக்க முடியும்" என்றார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...