கல்லீரல் நோயாளிகளுக்கு உதவும் வகையில் “மறுவாழ்வு” என்ற குழு தொடக்கம்

கோவை. டிசம்பர் 4

கே.எம்.சி.எச் மருத்துவமனையில் 2014 ஜுலை மாதம் முதல் தற்போது வரை 75 கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது. இதனை கொண்டாடும் விதமாக சனிக்கிழமை கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நோயாளிகளுக்கு துணைபுரியும் வகையில் “மறுவாழ்வு” என்ற குழு தொடங்கப்பட்டது.

இந்த குழு கல்லீரல் நோயாளிகள், அதே போன்ற நோயினை ஏற்கனவே அனுபவித்தவர்களோடு உரையாட மற்றும் அவர்களது பயத்தை போக்கவும், தகவல் அறியவும். கருத்துகளை பகிர்ந்துகொள்ளவும் மிகவும் உதவியாக இருக்கும் என கே.எம்.சி.எச் மருத்துவமனை தலைவர் மருத்துவர் நல்ல ஜி. பழனிசாமி தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், “தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் தான் அனைத்துவகை கல்லீரல் மாற்று அறுவைச்சிகிச்சை வழக்கும் மிகப்பெரிய பிரிவு உள்ளது. இப்பிரிவில் முற்றிய கல்லீரல் புற்று, கணைய புற்று ஆகியவற்றுக்கும் சிகிச்சை வழங்கப்படுகிறது,” என்றார்.

இந்நிகிழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவக்குமார் கலந்துகொண்டார். அவர் பேசுகையில் ” நோய்களில் கொடுமையானது கல்லீரல் நோய்தான் மற்ற எல்லா நோய்களும் முதலே தெரிய வாய்ப்புள்ளது ஆனால் கல்லீரல் மற்றுமே முற்றிலும் முற்றிய பிறகு தான் தெரியவரும் எனவே பொதுமக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்,” என்றார்.

கோவையில் அனைத்துவகை அதிநவீன தொழில்நுட்பமும் உள்ளது எனவே கல்லீரல் நோயாளிகள் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சைக்காக பயப்பட வேண்டாம் என்று கே.எம்.சி.எச் கல்லீரல் பிரிவு தலைவர் மருத்துவர் எஸ். விவேகானந்தன் கூறினார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...