மாறுவேட போட்டியில் அசத்திய மாற்றுதிறனாளி மாணவர்கள்

கோவை, டிசம்பர் 4

உலக மாற்றுதிறனாளிகள் தினம் டிசம்பர் 3 ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு கோவை ஆர். எஸ். புரத்தில் உள்ள மாநகராட்சி காதுகேளாதோர் பள்ளியில் மாற்று திறனாளி மாணவர்களுக்கு மாறுவேட போட்டி நடைபெற்றது.

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 35க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.

இதில் நேரு மாமா, மருத்துவர், ஏஞ்சல், ராணுவ வீரர், போலீஸ், விநாயகர், தமிழ் வாத்தியார், ஜெண்டில்மேன் போன்ற வேடங்களை அணிந்து மாணவர்கள் அசத்தினர்கள்.

இப்பள்ளியில் காதுகேளாதோர், ஆடிசம், மூளை வளர்ச்சி குன்றிய மாணவர்கள் படித்து வருகின்றனர்.

மேலும் பள்ளி செல்ல தயார் செய்யும் மையம் சிறப்பு ஆசிரியர் எஸ். புஷ்பவள்ளி கூறுகையில் " மாற்று திறனாளி மாணவர்களுக்கு எங்கள் மையத்தில் சிறப்பு பிசியோதிரபி, பேச்சு பயிற்சி போன்றவை சிறப்பாக தரப்படுகிறது. பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் வளர்ச்சியை நேரடியாக காணலாம். அரசாங்கத்தால் இம்மையம் காதுகேளாதோர் பள்ளியில் நடத்தப்படுகிறது இதற்கு கட்டணம் கிடையாது. தனியார் பள்ளிகளை விட இங்கு சிறப்பான பயிற்சிகள் மாணவர்களுக்கு தரப்படுகின்றது," என்றார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...